என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கடந்த 53 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.45 குறைந்தது
Byமாலை மலர்28 Nov 2018 10:26 PM GMT (Updated: 28 Nov 2018 10:26 PM GMT)
சென்னையில் கடந்த 53 நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.10.45 குறைந்து நேற்று ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது. #Petrol #Diesel
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.05-க்கு விற்பனையானது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி உச்சத்தின் உச்சமாக பெட்ரோல் விலை ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ந் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1.50-க்கு குறைத்தது. இதனால் மராட்டியம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான தங்களது வரியையும் சற்று குறைத்தன. இதனால் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.
சென்னையில் கடந்த அக்டோபர் 4-ந் தேதி ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 53 நாட்களில் ரூ.10.45 குறைந்து நேற்று ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று ரூ.79.79-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.7.02 குறைந்து ரூ.72.77-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.05-க்கு விற்பனையானது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 4-ந் தேதி உச்சத்தின் உச்சமாக பெட்ரோல் விலை ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ந் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.1.50-க்கு குறைத்தது. இதனால் மராட்டியம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் பெட்ரோல் மீதான தங்களது வரியையும் சற்று குறைத்தன. இதனால் தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.
சென்னையில் கடந்த அக்டோபர் 4-ந் தேதி ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 53 நாட்களில் ரூ.10.45 குறைந்து நேற்று ரூ.76.88-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று ரூ.79.79-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.7.02 குறைந்து ரூ.72.77-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X