என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Byமாலை மலர்29 Nov 2018 10:02 AM GMT (Updated: 29 Nov 2018 10:02 AM GMT)
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 130.75 அடியை எட்டியுள்ளது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது.
இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை அது 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் தண்ணீர் தேவையில்லை. ஒரு சிலர் மட்டும் அடுத்த போக சாகுபடிக்காக நாற்றாங்கால் நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 875 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,360 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 58.76 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.65 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.25 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 130.75 அடியை எட்டியுள்ளது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து 666 கன அடியாக குறைந்துள்ளது.
இருந்தபோதும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 900 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை அது 1000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனால் தண்ணீர் தேவையில்லை. ஒரு சிலர் மட்டும் அடுத்த போக சாகுபடிக்காக நாற்றாங்கால் நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து 875 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1,360 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 58.76 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.65 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 126.25 அடியாக உள்ளது. வருகிற 30 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X