search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நடந்து சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
    X

    நடந்து சென்ற ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

    நடந்து சென்ற ஆசிரியையிடம் 5 தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மலைக்கோட்டை:

    திருச்சி இ.பி. ரோடு, ஜான் தோப்பு பகுதியில் உள்ள கார்கில் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி கற்பகம் (வயது 46). இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலையில் கற்பகம் தனது வீட்டிலிருந்து ஆண்டார் தெரு பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் கற்பகம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகம் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்து கற்பகம் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×