search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவனுக்கு அணையை விட அணியை பற்றித்தான் கவலை - தமிழிசை
    X

    திருமாவளவனுக்கு அணையை விட அணியை பற்றித்தான் கவலை - தமிழிசை

    திருமாவளவனுக்கு அணையை விட அணியை பற்றித்தான் கவலை என்று பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan #Thirumavalavan
    சென்னை:

    மேகதாது அணை கட்ட ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, ‘தி.மு.க. அணியை பலவீனப்படுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதிலடி கொடுத்து பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:-



    திருமாவளவனுக்கு கவலை அணையை பற்றியது அல்ல. அணியைப்பற்றித் தான் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் 1971-ல் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது ஹேமாவதி அணைகட்ட ஆட்சேபனை இல்லை என்று பேசியதையும், தற்போது மு.க.ஸ்டாலின் போராடுவதையும் வெளியிட்டுள்ளார். #TamilisaiSoundararajan #Thirumavalavan

    Next Story
    ×