search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1¾ லட்சம் கொள்ளை- விவசாயியிடம் கைவரிசை
    X

    மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1¾ லட்சம் கொள்ளை- விவசாயியிடம் கைவரிசை

    செங்குன்றத்தில் விவசாயியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1¾ லட்சம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் தேடி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சோழவரத்தை அடுத்த நாரனம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி விவசாயி.

    இவர் நேற்று செங்குன்றத்திற்கு வந்து திருவள்ளுர் கூட்டுசாலை அருகே உள்ள அரசு வங்கி ஒன்றில் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் எடுத்தார். அதை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டினார்.

    செங்குன்றம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். சாப்பிட்டுவிட்டு வந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தி செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×