என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாட்டு மண்ணில் தாமரை மலராது- திருமாவளவன்
Byமாலை மலர்19 Dec 2018 5:38 AM GMT (Updated: 19 Dec 2018 5:38 AM GMT)
குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம். ஆனால் தமிழ்நாட்டு மண்ணில் தாமரை மலராது என்று திருமாவளவன் பேசினார். #BJP #Thirumavalavan
கோவை:
சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு -1957 என்ற நூல் வெளியீட்டு விழா கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது.
தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் எழுதிய இந்நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து என கலைஞர் சிலை திறப்பு விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பேசி உள்ளனர். இதையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பேசினார்.
அரசியல் அமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டை பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், இதன் அரசியல் முகமான பாரதிய ஜனதாவால் அரசியல் அமைப்புக்கும், ஜனநாயக உரிமைக்கும் ஆபத்து வந்துள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடந்த 10-ந்தேதி திருச்சியில் சனாதன எதிர்ப்பு, தேச பாதுகாப்பு மாநாடு நடத்த இருந்தோம். இந்த மாநாடு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் எல்லா தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
குளம், குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம். தமிழ்நாட்டு மண்ணில் தாமரை மலராது. இது பெரியார் பிறந்த மண். சனா தன கும்பலின் வாலை ஒட்ட நறுக்க வேண்டும். இவர்கள் இந்தியாவை பாரதம் என சொல்லாமல் இந்து ராஷ்டி ரம் என பெயர் சூட்ட நினைக்கின்றனர். இந்த சனாதன கும்பலை வேரறுக்க வேண்டும். இவர்கள் எப்படி உருண்டு, புரண்டாலும் தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். சாஜித் வரவேற்று பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சுசீகலையரசன், வக்கீல் அணி துரை. இளங்கோவன், இளவரசன், கோவை குமணன், பாலசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #Thirumavalavan
சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டம் எரிப்பு -1957 என்ற நூல் வெளியீட்டு விழா கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது.
தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் திருச்சி செல்வேந்திரன் எழுதிய இந்நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு ஆபத்து என கலைஞர் சிலை திறப்பு விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பேசி உள்ளனர். இதையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பேசினார்.
அரசியல் அமைப்பை பாதுகாக்காவிட்டால் நாட்டை பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், இதன் அரசியல் முகமான பாரதிய ஜனதாவால் அரசியல் அமைப்புக்கும், ஜனநாயக உரிமைக்கும் ஆபத்து வந்துள்ளது. எனவே விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடந்த 10-ந்தேதி திருச்சியில் சனாதன எதிர்ப்பு, தேச பாதுகாப்பு மாநாடு நடத்த இருந்தோம். இந்த மாநாடு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் எல்லா தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா, பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகள் என்ன நோக்கத்திற்காக செயல்படுகிறார்கள்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்ற தலைவர் மோடி. இவர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என துடிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி முன்னிலை வகித்தார். சாஜித் வரவேற்று பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சுசீகலையரசன், வக்கீல் அணி துரை. இளங்கோவன், இளவரசன், கோவை குமணன், பாலசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #BJP #Thirumavalavan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X