search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்துங்கநல்லூரில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    செய்துங்கநல்லூரில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை உடனடியாக வழங்க கோரி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    செய்துங்கநல்லூர்:

    அகவிலைபடியுடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பொங்கல் கருணை தொகை உடனடியாக வழங்கிட வேண்டி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கத்தினர் செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் கருப்பசாமி, சுந்தரவள்ளி முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் துரைப்பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்க வட்ட தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் பேசினர். முடிவில் அடைக்கலம் நன்றி கூறினார்.
    Next Story
    ×