search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராவூரணி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி- 2 பேர் படுகாயம்
    X

    பேராவூரணி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி- 2 பேர் படுகாயம்

    பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    பேராவூரணி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அனவயல் செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் வல்லரசு (வயது21). அதே பகுதி சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பிரவீன்(18). இருவரும் நண்பர்கள்.

    இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அனவயலில் இருந்து பேராவூரணிக்கு வந்துள்ளனர். அப்போது பெரியகுளம் என்ற பகுதியில் தனியார் பள்ளி அருகில் பாலத்தில் வந்தபோது அம்மையாண்டியை சேர்ந்த மெக்கானிக் கணபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வல்லரசு சம்பவ இடத்திலேயே பலியானார். 

    மேலும் காயமடைந்த பிரவீண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கணபதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வல்லரசு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×