search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருநாவலூர் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தல்- 2 பேர் கைது
    X

    திருநாவலூர் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தல்- 2 பேர் கைது

    திருநாவலூர் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.

    திருநாவலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாக்கியநாதன் (வயது 40), திருமேனி (32). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை திருநாவலூர் அருகே உள்ள உடயாநந்தல் கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதிபெறாமல் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக திருநாவலூர் சப்-இன்ஸ் பெக்டர் பழனிநாதன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டிருந்த பாக்கியநாதன், திருமேனி ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×