search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து பலி
    X

    புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென மயங்கி விழுந்து பலி

    புதுவையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 63). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முரளிதரன் தனது மோட்டார் சைக்கிளில் உப்பளம் ரோடு வழியாக சோனாம் பாளையம் சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் முரளிதரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு பகுதி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×