search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    புத்தாண்டு கொண்டாட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
    X

    புத்தாண்டு கொண்டாட்டம்: மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சுரேந்திரன் (வயது 20). இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட வீட்டின் முன்பு உள்ள சாலையில் தனது பெயரை எழுதிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சுரேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேந்திரன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×