search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்கள்
    X

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்கள்

    சேதுபாவாசத்திரம் அருகே சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தி.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற உறவினர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபால் சங்கர் (வயது 45). தி.மு.க. பிரமுகர். பள்ளத்தூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மையின் கணவர் அன்பரசு ஆகியோருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பட்டுக்கோட்டை கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை கோர்ட்டுக்கு சென்று ஆஜரானார். பின்னர் அங்கு விசாரணை முடிந்ததும் ஆண்டிக்காடு புறப்பட்டார். அவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அருகில் சென்ற போது அவரை பின் தொடர்ந்து ஒரு மர்ம கார் வந்தது. அந்த கார் திடீரென கோபால் சங்கர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நின்றது. இதைத்தொடர்ந்து காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல் கோபால் சங்கரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதைத்தொடர்ந்து அவரை கொலை செய்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சேதுபாவாசத்திரம் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட கோபால் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக கோபால் சங்கரை அவரது அண்ணன் மனைவி உஷாராணி, அக்காள் வள்ளியம்மை கணவர் அன்பரசு ஆகியோர் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசை கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட உஷாராணி மற்றும் கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலையுண்ட கோபால் சங்கருக்கு ஜான்தேவி (32) என்ற மனைவியும், நிவேதா (8) ஹரிணி (3) ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    முன்னாள் தி.மு.க. கவுன் சிலரை சொந்த அக்காள் கணவர் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×