என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தேனி அருகே மின் மோட்டார்கள், வாழைத்தார் திருடிய கும்பல்
தேனி:
தேனி அருகே பூதிப்புரம், சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 36). அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அங்கு இருந்த மின் மோட்டாரை 2 பேர் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் மின் மோட்டாரை திருடியது சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (32), பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த நிஜந்தன் (26) என தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
சின்னமனூர் ஷேக் மைதீன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மனைவி ஜெயபாரதி (60). லட்சுமி நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கிருந்த மின் மோட்டார் மற்றும் 40 அடி மின் வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சின்னமனூர் அருகே முத்துலாபுரம் சின்ன ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (40). அதே பகுதியில் வாழைத்தோட்டம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்ம நபர்கள் 10 வாழைத்தார்களை வெட்டி கடத்திச் சென்றனர்.இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்