search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும்- இளங்கோவன் பேட்டி
    X

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரஸ் போட்டியிடும்- இளங்கோவன் பேட்டி

    தமிழகத்தில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிடும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். #elangovan #dmk #congress #parliamentelection

    ஆம்பூர்:

    வாணியம்பாடியில் திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய முயற்சி எடுத்து இருக்கின்றனர். முயற்சியின் பலனாக கொல்கத்தாவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.

    அதில் காங்கிரஸ், தி.மு.க. உள்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பேசியிருக்கின்றனர். இது நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன். தேர்தல் வருவதற்குள் இது ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்.

    எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகவே இருக்கிறது. தேர்தலில் மோடி தோற்கடிக்கப்படுவார். காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க அதிகாரத்தையும், பணபலத்தையும் உபயோகப்படுத்தி குழப்பம் ஏற்படுத்துகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சி கலையாது.


    தமிழகத்தில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்தான் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #dmk #congress #parliamentelection

    Next Story
    ×