என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தேனியில் தபால் ஊழியர் உள்பட 2 இளம்பெண்கள் மாயம்
தேனி:
தேனி அருகே உள்ள வீரபாண்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த சீனி மகள் ராஜலெட்சுமி (வயது 21). இவர் திண்டுக்கல்லில் உள்ள தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
பின்னர் மீண்டும் வேலைக்கு செல்வதற்காக பாட்டி சுருளியம்மாளுடன் தேனி புதிய பஸ்நிலையம் வந்தார். அங்குள்ள கழிப்பறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜலெட்சுமி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் லிங்கம்மாள் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் டொம்புசேரியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர்தான் தனது மகளை கடத்தி சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார்அவர்களை தேடி வருகின்றனர்.
போடி சர்ச் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் மனைவி அமுதா ராணி (வயது 19). இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது கணவர் பிரவீன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்