என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டு தந்தையை தாக்கியதால் மாணவர் தற்கொலை
Byமாலை மலர்24 Jan 2019 10:38 AM GMT (Updated: 24 Jan 2019 10:38 AM GMT)
வாணியம்பாடி அருகே இளம்பெண்ணிடம் பேசியதை தட்டி கேட்டு மாணவனின் தந்தையை தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் கூட்டுபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரத்குமார் (19). திருப்பத்தூரில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இவரது உறவினர் விஜயகாந்த் (19). இவரது சகோதரியிடம் சரத்குமார் அடிக்கடி பேசியதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா (19), ஆசைத்தம்பி (23), சந்தோஷ் என்கிற பெருமாள் சாமி (26) ஆகியோர் சரத்குமாரை தாக்கினர்.
இதனை தடுக்க முயன்ற கோவிந்தசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
தந்தை தாக்கப்பட்டதால் அவமானம் தாங்காமல் சரத்குமார் மனமுடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் இன்று காலை இறந்தார்.
திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வாணியம்பாடி அருகே உள்ள தகரகுப்பம் கூட்டுபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சரத்குமார் (19). திருப்பத்தூரில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இவரது உறவினர் விஜயகாந்த் (19). இவரது சகோதரியிடம் சரத்குமார் அடிக்கடி பேசியதாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் சூர்யா (19), ஆசைத்தம்பி (23), சந்தோஷ் என்கிற பெருமாள் சாமி (26) ஆகியோர் சரத்குமாரை தாக்கினர்.
இதனை தடுக்க முயன்ற கோவிந்தசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த அவர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
தந்தை தாக்கப்பட்டதால் அவமானம் தாங்காமல் சரத்குமார் மனமுடைந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் இன்று காலை இறந்தார்.
திம்மாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X