search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பரமக்குடியில் கடைக்குள் புகுந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை
    X

    பரமக்குடியில் கடைக்குள் புகுந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை

    மளிகை கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    பரமக்குடி:

    பரமக்குடி பாரதி நகரில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பலசரக்கு பொருட்கள் வாங்கிச் செல்வதுண்டு.

    நேற்று வியாபாரம் முடிந்ததும் பாலமுருகன் கடையை பூட்டிச் சென்றார். இன்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறந்தார்.

    அப்போது பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் யாரோ புகுந்திருப்பதை அறிந்த பாலமுருகன், நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து கடையை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது கூடையின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்வழியே யாரோ உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடையின் கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் சி.சி.டி.வி. பதிவு கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க் கொள்ளை போயிருப்பதாக பாலமுருகன் போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×