search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை ஒரே நாளில் ரூ.144 உயர்வு
    X

    தங்கம் விலை ஒரே நாளில் ரூ.144 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.40 பைசா உயர்ந்து ரூ.43.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. Gold #GoldPrice
    சென்னை :

    சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத அளவு ரூ.25 ஆயிரத்தை தங்கம் விலை கடந்தது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 145-க்கும், பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 160-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது. இந்த மாதத்தின் அதிகபட்ச விலை ஏற்றமாக இது பதிவாகி இருக்கிறது.

    வெள்ளியின் விலையும் நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.40 பைசா உயர்ந்து ரூ.43.60-க்கும், கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.43 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி விற்பனை ஆனது.

    ‘‘தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. அதேவேளை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் வீழ்ச்சி கண்டு வருவதால் தங்கம் விலை ஏறுமுகத்தில் செல்கிறது. இன்னும் ஓரிரு நாட்கள் இந்த நிலையே இருக்கும்’’, என்று சென்னை தங்கம்-வைரம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறினார்.
    Next Story
    ×