search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கனூர் அருகே கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாத வேதனையில் பெண் தற்கொலை
    X

    திருக்கனூர் அருகே கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாத வேதனையில் பெண் தற்கொலை

    திருக்கனூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மனைவியை கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாத வேதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு புதுநகரை சேர்ந்தவர் நடராஜன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 48). இவர்களுக்கு ஜிப்மரில் நர்சாக பணிபுரிந்து வரும் அனிதா உள்பட 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே விமலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதுபோல் சம்பவத்தன்றும் விமலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி நடராஜனிடம் கூறினார். ஆனால், விமலாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் நடராஜன் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த விமலா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த நடராஜன் அங்கு மனைவி வி‌ஷம் தின்று மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் ஜிப்மரில் நர்சாக பணிபுரிந்து வரும் தனது மகள் அனிதாவுக்கு தகவல் தெரிவித்து விட்டு விமலாவை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விமலா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×