என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தா.பேட்டை அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்31 Jan 2019 2:53 PM GMT (Updated: 31 Jan 2019 2:53 PM GMT)
தா.பேட்டை அருகே விட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தா.பேட்டை:
தா.பேட்டை அடுத்த வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் ஜவுளிகடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவர் அதே பகுதியை சேர்ந்த இந்துமதியை (21) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 5 மாத பெண்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்துமதி தனது தந்தை வீட்டிற்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசுமருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்து மதிக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களுக்குள் தற்கொலை செய்து கொண்டதால் முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X