search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். தொடங்கி வைத்தனர்
    X

    அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். தொடங்கி வைத்தனர்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர்களுக்கு விருப்ப மனு வினியோகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர். #ParliamentElection #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு இன்று முதல் வருகிற 10-ந்தேதி பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று தொண்டர்களுக்கு விருப்ப மனு வழங்குவது தொடங்கியது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்து தொண்டர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கினர்.

    இதில் அமைச்சர்கள், கட்சி மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தொண்டர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.

    விருப்ப மனுக்களை பெறுவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

    தமிழ்மகன் உசேன், தளவாய்சுந்தரம், ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர்.

    தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூ.25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. #ParliamentElection #ADMK
    Next Story
    ×