search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் தொடங்கும்- திருமாவளவன் பேட்டி
    X

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் தொடங்கும்- திருமாவளவன் பேட்டி

    எங்கள் கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சு வார்த்தையில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க.- அ.தி.மு.க. தலைமையில் 2 அணிகள் தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளன. தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு வரை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் தி.மு.க. தலைமையில்தான் 11 கட்சிகள் இடம் பெற்று மெகா கூட்டணியாக உருவாகியுள்ளது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    டெல்லியில் ஆட்சி அமைப்பது யார்? என்பதை தமிழகம் தான் முடிவு செய்யும். தமிழகத்தின் தேர்தல் முடிவு தான் அகில இந்திய அளவில் எதிர் பார்க்கப்படுகிறது.

    மோடிக்கு எதிராக அணி திரளும் மத சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மத்தியில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம். மம்தா பானர்ஜி தலைமையில் 20 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.

    இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராகி விட்டன. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக தி.மு.க. கூட்டணியில் 11 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, பொன்குமாரின் கட்டிட தொழிலாளர் கட்சி ஆகியவை ஒன்றிணைந்துள்ளன.

    தி.மு.க.வுக்கு எதிராக ஒரு சில கட்சிகள் இருந்தாலும் இன்னும் அணி என்ற வடிவம் பெறவில்லை.

    பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைக்க மாட்டார்கள். சி.பி.ஐ.யை வைத்து அச்சுறுத்தி தான் அ.தி.மு.க.வோடு பா.ஜனதா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. மனமுவந்து கூட்டணி அமையாது.

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அது அ.தி.மு.க.வுக்கு தான் நஷ்டம். பலவீனம் ஆகி விடும்.

    பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இருவரையும் சேர்த்து கொண்டால் கூட்டணியில் எண்ணிக்கைதான் கூடுமே தவிர பயன் இல்லை.

    கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த மாத இறுதிக்குள் பேச்சு வார்த்தை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #thirumavalavan #parliamentelection

    Next Story
    ×