search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை
    X

    பாவூர்சத்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் இயக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

    பாவூர்சத்திரத்தில் இருந்து தினமும் சென்னைக்கு அரசு பஸ் இயக்க கோரி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

    பாவூர்சத்திரம்:

    கீழப்பாவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆனந்த் போக்கு வரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழில் நகரான பாவூர்சத்திரம் சுமார் 100-க்கு மேற்பட்ட குக்கிராமங்களுக்கு மையப் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு காய்கனி சந்தை, அரிசி ஆலைகள், மர அறுவை ஆலைகள், ஓடு தொழிற்சாலைகள் என பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இங்கிருந்து நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, சிவகாசி, பாபநாசம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் சென்னை செல்ல வேண்டுமானால் தனியார் பஸ்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இங்கிருந்து கிளம்பினாலும் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும் விடுமுறை தினங்களில் அதிக கட்டணம் செலுத்தியும் பஸ் கிடைக்காத நிலை உள்ளது.

    எனவே பாவூர்சத்திரத்தில் இருந்து தினமும் செல்லும் வகையில் அரசு பஸ் இயக்கிட அதிகாரிகள் ஆவண செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×