என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
நெல்லை தாழையூத்தில் பள்ளி மாணவன் வேன் மோதி பலி
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து காமராஜ் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன். கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துச் செல்வம் (12). இவன் அதே பகுதி சங்கர் நகரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
முத்து செல்வம் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவது வழக்கம். இன்று காலையும் வழக்கம் போல் சைக்கிளில் புறப்பட்டு சென்ற அவன் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் அவன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்துச்செல்வத்திற்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவன் முத்துசெல்வம் பரிதாபமாக இறந்தான்.
இந்த விபத்து குறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்