என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே 4 வழிச்சாலையில் பிணத்தை வைத்து மறியல் - 12 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்13 Feb 2019 11:42 AM GMT (Updated: 13 Feb 2019 11:42 AM GMT)
திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு வசதி இன்றி இருந்தனர் கடந்த 2015ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் ஆதிதிராவிட மக்கள் நான்குவழிச் சாலை அருகே உள்ள கொக்கலாஞ்சேரி கண்மாய்க்குள் 12 சென்ட் இடம் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது
இந்நிலையில் நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னக்கிளி(60) இயற்கை மரணம் அடைந்தார். இவரை அடக்கம் செய்வதற்காக புதிய சுடுகாட்டிற்கு கொண்டு வரும்போது சுடுகாடு அருகே உள்ள இடத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் இங்கு புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் மக்கள் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதாக அன்னக்கிளியின் உறவினர்கள் கருப்பையா, மணிகண்டன், கருப்பு, ராமர், பாலா, சின்னா, ராசுக்குட்டி, மருதுபாண்டி, குருசாமி, மாரியப்பன், விஜயபாண்டி, பெரியாத்தாள் ஆகிய 12 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
திருமங்கலம் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் சுடுகாடு வசதி இன்றி இருந்தனர் கடந்த 2015ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில் ஆதிதிராவிட மக்கள் நான்குவழிச் சாலை அருகே உள்ள கொக்கலாஞ்சேரி கண்மாய்க்குள் 12 சென்ட் இடம் சுடுகாட்டிற்கு ஒதுக்கப்பட்டது
இந்நிலையில் நல்லமநாயக்கன்பட்டி சேர்ந்த மாரியப்பன் மனைவி அன்னக்கிளி(60) இயற்கை மரணம் அடைந்தார். இவரை அடக்கம் செய்வதற்காக புதிய சுடுகாட்டிற்கு கொண்டு வரும்போது சுடுகாடு அருகே உள்ள இடத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள் இங்கு புதைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிடர் மக்கள் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. மற்றும் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி புதிய சுடுகாட்டில் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி அளித்து அதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதாக அன்னக்கிளியின் உறவினர்கள் கருப்பையா, மணிகண்டன், கருப்பு, ராமர், பாலா, சின்னா, ராசுக்குட்டி, மருதுபாண்டி, குருசாமி, மாரியப்பன், விஜயபாண்டி, பெரியாத்தாள் ஆகிய 12 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X