என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தேர்தல் களத்தில் அதிமுக- பா.ஜனதா எதிர்ப்பை கையில் எடுக்கும் தினகரன்
Byமாலை மலர்21 Feb 2019 8:37 AM GMT (Updated: 21 Feb 2019 8:37 AM GMT)
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்ய உள்ளார். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதுக்கட்சியை தொடங்கிய அவர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசிவரும் தினகரன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மோடி அரசுக்கு எதிராகவே பிரசாரம் செய்தார். மோடியா? இந்த லேடியா? என்றே சவால் விட்டார்.
இந்த தேர்தலில் அதே பாணியை பின்பற்றி பிரசாரத்தில் ஈடுபட தினகரன் திட்டமிட்டுள்ளார். 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண முடிவு செய்துள்ள தினகரன் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தன்பக்கமே இருப்பதாக கூறிக்கொள்ளும் தினகரன், அது நிச்சயம் தனக்கு ஆதரவான ஓட்டுகளாக மாறும் என்றே கணித்துள்ளார்.
அதே நேரத்தில் மேகதாது, முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவித்து விட்டதாகவே பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் கையில் எடுத்து தினகரன் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை தோற்கடித்து வெற்றி பெற்ற தினகரன் அதன் பின்னர் அரசியல் களத்தில் பேசப்படும் நபராகவே மாறினார்.
எனவே பாராளுமன்ற தேர்தல் களத்திலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 அணிகளுக்கும் தினகரன் சவாலாக இருப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதுக்கட்சியை தொடங்கிய அவர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசிவரும் தினகரன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 2 கட்சிகளும் சேர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
தமிழக நலனில் அக்கறை காட்டாத அ.தி.மு.க. அரசு என்றும், துரோக ஆட்சி நடைபெறுகிறது என்றும் தினகரன் தொடர்ந்து கூட்டங்களில் பேசி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் களத்திலும் இதனையே பலமான கோஷமாக எழுப்ப தினகரன் திட்டமிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மோடி அரசுக்கு எதிராகவே பிரசாரம் செய்தார். மோடியா? இந்த லேடியா? என்றே சவால் விட்டார்.
இந்த தேர்தலில் அதே பாணியை பின்பற்றி பிரசாரத்தில் ஈடுபட தினகரன் திட்டமிட்டுள்ளார். 40 தொகுதிகளிலும் தனித்து களம் காண முடிவு செய்துள்ள தினகரன் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறார். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் தன்பக்கமே இருப்பதாக கூறிக்கொள்ளும் தினகரன், அது நிச்சயம் தனக்கு ஆதரவான ஓட்டுகளாக மாறும் என்றே கணித்துள்ளார்.
அதே நேரத்தில் மேகதாது, முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவித்து விட்டதாகவே பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற விவகாரங்களை எல்லாம் கையில் எடுத்து தினகரன் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் அ.தி.மு.க., தி.மு.க.வை தோற்கடித்து வெற்றி பெற்ற தினகரன் அதன் பின்னர் அரசியல் களத்தில் பேசப்படும் நபராகவே மாறினார்.
எனவே பாராளுமன்ற தேர்தல் களத்திலும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 அணிகளுக்கும் தினகரன் சவாலாக இருப்பார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். #AMMK #TTVDhinakaran #ADMK #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X