என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அதிமுக-பாமக பண நல கூட்டணி: முக ஸ்டாலின்
Byமாலை மலர்22 Feb 2019 7:21 AM GMT (Updated: 22 Feb 2019 7:21 AM GMT)
அ.தி.மு.க., பா.ம.க. அமைத்துள்ளது மக்கள் நல கூட்டணி அல்ல, பண நல கூட்டணி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். #DMK #MKStalin #ADMK #PMK
சென்னை:
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த பா.ம.க. இன்று தேர்தலுக்காக அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
எனவே இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி அல்ல பண நல கூட்டணி.
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கடல் தாண்டி புகழ் கொடி நாட்டினார்கள். ஆனால் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் கடல் தாண்டி ஊழல் செய்துள்ளதை பார்க்கிறோம்.
அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் சிறுசேரியில் ஒரு கட்டிடம் கட்ட இந்த ஆட்சியில் அனுமதி கேட்டனர். இதற்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது.
இப்படி பணம் கொடுத்தது தவறு என்று அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
எனவே இதுபற்றி முறையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்துள்ளோம். 1 வாரம் பொறுத்திருப்போம். இதில் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, வி.பி.துரைசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி, துர்கா ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, பல்லாவரம் இ.கருணாநிதி, கும்மிடிப்பூண்டி வேணு, ஏ.டி.மணி, மருதுகணேஷ், மணல் ரவி, ஜி.ஏழுமலை, யூ.நேதாஜி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மண விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் வரவேற்றார். #DMK #MKStalin #ADMK #PMK
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மகன் எஸ்.ஏ. சீனிவாசன்- கே.சங்கீதா ஆகியோரின் திருமணம் திருவேற்காடு பெருமானகரம் ஜி.பி.என். பேலசில் இன்று நடைபெற்றது. திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். மணமக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
மணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்த பா.ம.க. இன்று தேர்தலுக்காக அவர்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
அ.தி.மு.க., பா.ம.க. அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. மக்கள் துரோக கூட்டணியாகும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நிர்வாகம் நடத்த தெரியுமா? என்று கேட்டவர் டாக்டர் ராமதாஸ், ஊழல் ஆட்சி என்று அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி பட்டவர்த்தனமாக பேசிவிட்டு இப்போது கூட்டணி அமைத்துள்ளார்.
எனவே இந்த கூட்டணி மக்கள் நல கூட்டணி அல்ல பண நல கூட்டணி.
தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கடல் தாண்டி புகழ் கொடி நாட்டினார்கள். ஆனால் இப்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் கடல் தாண்டி ஊழல் செய்துள்ளதை பார்க்கிறோம்.
அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் சிறுசேரியில் ஒரு கட்டிடம் கட்ட இந்த ஆட்சியில் அனுமதி கேட்டனர். இதற்கு ரூ.26 கோடி லஞ்சம் கொடுத்ததாக அந்த நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது.
இப்படி பணம் கொடுத்தது தவறு என்று அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
எனவே இதுபற்றி முறையாக விசாரணை நடத்த சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத்துள்ளோம். 1 வாரம் பொறுத்திருப்போம். இதில் நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, வி.பி.துரைசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பெரிய கருப்பன், ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன், உதயநிதி, துர்கா ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, பல்லாவரம் இ.கருணாநிதி, கும்மிடிப்பூண்டி வேணு, ஏ.டி.மணி, மருதுகணேஷ், மணல் ரவி, ஜி.ஏழுமலை, யூ.நேதாஜி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மண விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் வரவேற்றார். #DMK #MKStalin #ADMK #PMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X