search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது
    X

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல் பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் பாளையம், சித்தன் நகர், 4-வது வீதி அருகே வாய்க்கால் கரையோரம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வடிவேல், ராஜேஸ்குமார், வடிவேல், மணிகண்டன், மணி, குமார் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணமும், சீட்டு கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×