என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்- விவசாயி கைது
Byமாலை மலர்24 Feb 2019 4:59 PM GMT (Updated: 24 Feb 2019 4:59 PM GMT)
வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் தென்னம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது56). விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(53). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னங்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சாந்திக்கும், மாரியப்பனுக்கும் விவகாரத்து ஆகி விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் சாந்தியை செல்வராசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சித்ரா, கணவர் செல்வராசுவிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி சித்ரா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X