search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர் பலி: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இரங்கல்
    X

    மின்சாரம் தாக்கி அதிமுக தொண்டர் பலி: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இரங்கல்

    சோழிங்கநல்லூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #ADMK #ADMKCadres #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சோழிங்கநல்லுரில் அ.தி.மு.க. கொடி கம்பம் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டபோது எஸ்.பாபு மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தை அறிந்து துயரம் அடைந்தோம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவியாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #ADMK #ADMKCadres
    Next Story
    ×