search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்- குஷ்பு
    X

    ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்- குஷ்பு

    பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்ததை மறந்து இன்று ராமதாஸ் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார் என்று குஷ்பு கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன?

    பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தாத பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜனதா அரசுக்கு பூஜ்யத்துக்கு கீழ் மதிப்பெண் அளித்தவர் ராமதாஸ். இன்று அவரும் அந்த பூஜ்யத்துடன் இணைந்து விட்டார்.



    தமிழக மக்களின் எதிர் காலத்தை மோடியிடம் அடகுவைத்து விட்டு பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    கே:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களை கைப்பற்றும் என கூறியிருக்கிறீர்கள், 40 தொகுதிகளை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையா?

    ப:- நம்பிக்கை இல்லாமல் இல்லை. 40 தொகுதிகளையும் எங்கள் கூட்டணி தான் கைப்பற்றும். 35 தொகுதி என எதற்கு கூறினேன் என்றால், சரி 4 பேராவது எதிர்தரப்பில் வெற்றிபெற்று மத்தியில் அமையவுள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை பார்க்கட்டுமே என்றுதான். எதிர்தரப்பே இருக்கக் கூடாது என நினைக்கக் கூடாது அல்லவா.

    கே:- தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரியின் செயல்பாடு எப்படி உள்ளது?

    ப:- கே.எஸ்.அழகிரி அருமையாக செயல்படுகிறார். அனைத்து தொண்டர்களையும் சந்திக்கிறார், நிர்வாகிகளை அரவணைக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விட்டுக்கொடுத்து செல்கிறார். இன்னும் சொல்லப்போனால் நீண்ட நாட்களாக கே.எஸ்.அழகிரி போல் ஒரு தலைவர் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு வர வேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

    கே:- தமிழகத்தில் நடக்கும் காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் உங்களை அதிகம் பார்க்க முடியவில்லையே?

    ப:- ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நான் இப்போதும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு தான் வருகிறேன். தமிழகத்தை மட்டும் மனதில் வைத்து கேள்வி கேட்காதீர்கள். பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.

    தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இதற்கு முன்னர் தலைவராக இருந்தவர் என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழைத்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டதால் இனி பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்ட மேடைகளில் என்னை காணலாம்.

    கே:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குஷ்பு மத்திய மந்திரி ஆக வாய்ப்பு இருக்கிறதா?

    ப:- (சிரிப்பு) யாருக்கு தெரியும், தேர்தலில் போட்டியிடுவேனா என்பதே எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன கொடுக்க வேண்டும் என்பது பற்றி ராகுல்காந்தி தான் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Kushboo #Ramadoss #ADMK #BJP
    Next Story
    ×