search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை- 2 வாலிபர்கள் கைது
    X

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை- 2 வாலிபர்கள் கைது

    பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மனைவி திவ்யா (வயது 35). சம்பவத்தன்று இரவு கணவனும், மனைவியும் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    அப்போது சிக்கந்தர் சாவடி ரோட்டில் 2 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் திவ்யாவை கிண்டல் செய்தது மட்டுமின்றி பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். இதனை பால்பாண்டி தட்டிக்கேட்டார்.

    இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்து சண்டையாக மாறியது. அப்போது பால்பாண்டியை இரும்பு கம்பியால் அடித்தனர்.

    அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திவ்யா இது தொடர்பாக அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து திவ்யாவிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக 2 பேரை கைது செய்து விசாரித்தார்.

    போலீஸ் விசாரணையில் அவர்கள் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்த அஜித் குமார் (25), ராம்ஜி (28) என்பது தெரியவந்தது. 

    Next Story
    ×