என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை - அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
Byமாலை மலர்10 March 2019 9:22 PM GMT (Updated: 10 March 2019 9:22 PM GMT)
பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #ParliamentElection
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் (17-ந் தேதி) மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாளாகும். அதேபோல், தேர்தலுக்கு அடுத்த நாள் (19-ந் தேதி) புனித வெள்ளி வருவதால் அன்றும் அரசு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
பொதுவாக இதுபோன்று தொடர் விடுமுறை வந்தால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தேர்தல் சமயத்திலும் இதுபோன்று தொடர் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அப்போதும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்களின் இந்தப் பயணம் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #ParliamentElection
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் (17-ந் தேதி) மகாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை நாளாகும். அதேபோல், தேர்தலுக்கு அடுத்த நாள் (19-ந் தேதி) புனித வெள்ளி வருவதால் அன்றும் அரசு விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.
பொதுவாக இதுபோன்று தொடர் விடுமுறை வந்தால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருப்பவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தேர்தல் சமயத்திலும் இதுபோன்று தொடர் விடுமுறை 5 நாட்கள் வருவதால், அப்போதும் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்களின் இந்தப் பயணம் வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று தெரிகிறது. இதனால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #ParliamentElection
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X