search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை
    X

    தேன்கனிக்கோட்டை அருகே கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை

    தேன்கனிக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்து கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருதுகோட்டை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது30). இவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முனிரத்தினம். இவர்களுக்கு சரண் என்ற 8 வயதில் மகனும், புனிதா என்ற 5 வயதில் மகளும் உள்ளனர்.

    நேற்று வீட்டில் முனிரத்தினம் தனது குழந்தையை அடித்ததாக தெரிகிறது. இதனை காத்தவராயன் தனது மனைவியை தட்டி கேட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதையடுத்து மனமுடைந்த காத்தவராயன் நேற்று மாலை மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு ஐயூர் சாலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற காத்தவராயன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×