என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை -பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்22 March 2019 10:06 AM GMT (Updated: 22 March 2019 10:06 AM GMT)
பொள்ளாச்சியில் வியாபாரியிடம் நகை-பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X