search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்
    X

    மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் மரணம்

    மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் கீச்சாங்குப்பம் வடக்கு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் உள்பட 4 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்த போது ராமச்சந்திரன் படகிலிருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கினார்.

    அவருடன் சென்றவர்கள் ராமச்சந்திரனை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து நாகை கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×