search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமண மண்டபத்தில் நூதன முறையில் காரில் நகை கொள்ளை
    X

    திருமண மண்டபத்தில் நூதன முறையில் காரில் நகை கொள்ளை

    திருமண மண்டபத்தில் நூதன முறையில் காரில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    வாணியம்பாடியை சேர்ந்தவர் கவுதம் சந்த் அவரது தங்கை திருமணம் புளியந்தோப்பு பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது.

    நேற்று இரவு திருமண வரவேற்பு நடந்தது. அதில் கலந்து கொள்ள கவுதம் சந்த் தனது காரில் மண்டபம் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் காரை ‘பார்க்‘ பண்ணுவதாக கூறி சாவியை வாங்கி சென்றார்.

    உடனே காரில் வைத்திருந்த நகையை எடுக்க கவதம் சந்த் கார் நிறுத்தும் இடத்துக்கு வந்தார். அங்கு கார் கதவு திறந்த கிடந்தது. உள்ளே வைத்திருந்த 7½ பவுன் தங்க நகை மற்றும் செல்போனையும், மர்ம நபரையும் காணவில்லை.

    அவன் நகையை கொள்ளையடித்து விட்டு கார் சாவியுடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்துது. இது குறித்து பேசின்பிரிட்ஜ் போலீசில்புகார் செய்தார். குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜிம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    Next Story
    ×