search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர் பலி
    X

    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர் பலி

    வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் சக்தி (வயது 15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த சக்தி, ஆண்டு இறுதித்தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்தார். சம்பவத்தன்று சக்தி, வீட்டில் இருந்து தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் தொண்டமாந்துறை நோக்கி சென்றார்.

    பிள்ளையார்பாளையத்தை தாண்டி சிறிது தூரம் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சக்தி படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்தி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த தொண்டமாந்துறையை சேர்ந்த மைக்கேல்ராஜை(34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×