என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர் பலி
Byமாலை மலர்9 May 2019 5:57 PM GMT (Updated: 9 May 2019 5:57 PM GMT)
வேப்பந்தட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் சக்தி (வயது 15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த சக்தி, ஆண்டு இறுதித்தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்தார். சம்பவத்தன்று சக்தி, வீட்டில் இருந்து தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் தொண்டமாந்துறை நோக்கி சென்றார்.
பிள்ளையார்பாளையத்தை தாண்டி சிறிது தூரம் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சக்தி படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்தி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த தொண்டமாந்துறையை சேர்ந்த மைக்கேல்ராஜை(34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன் சக்தி (வயது 15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்த சக்தி, ஆண்டு இறுதித்தேர்வு எழுதிவிட்டு முடிவிற்காக காத்திருந்தார். சம்பவத்தன்று சக்தி, வீட்டில் இருந்து தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் தொண்டமாந்துறை நோக்கி சென்றார்.
பிள்ளையார்பாளையத்தை தாண்டி சிறிது தூரம் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சக்தி படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சக்தி, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து, காரை ஓட்டி வந்த தொண்டமாந்துறையை சேர்ந்த மைக்கேல்ராஜை(34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X