search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லி விழுந்த வடையை சாப்பிட்ட 8 தொழிலாளர்களுக்கு வாந்தி - ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    பல்லி விழுந்த வடையை சாப்பிட்ட 8 தொழிலாளர்களுக்கு வாந்தி - ஆஸ்பத்திரியில் அனுமதி

    பொள்ளாச்சி அருகே பல்லி விழுந்த வடையை சாப்பிட்ட 8 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சியை அடுத்துள்ள சேத்துமடை, வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம், ஆனைமலை, தேவிப்பட்டினம், சர்க்கார்பதி,கோட்டூர், மலையாண்டி பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது. இங்குள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறிப்பதற்கு கூலியாட்கள் பல குழுக்களாக பிரிந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள காளியாபுரம் பகுதியில் உள்ள ஒரு சிறிய டீக்கடையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை வடை வாங்கி சாப்பிட்டனர்.

    இதில் 8 தொழிலாளர்கள் வாந்தி எடுத்தனர். அவர்கள் சாப்பிட்ட வடையில் பல்லி விழுந்து இருந்ததாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்த 8 தொழிலாளர்களும் வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினர். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×