என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொபட் மீது பஸ் மோதி விபத்து - கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
Byமாலை மலர்11 May 2019 6:04 PM GMT (Updated: 11 May 2019 6:04 PM GMT)
காஞ்சீபுரம் அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). மணியாச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (21) இவர்கள் 3 பேரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தனர்.
நேற்று காலை ஒரே மொபட்டில், இவர்கள் 3 பேரும் படுநெல்லி கிராமத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு, வந்து கொண்டிருந்தனர். மொபட்டை ரவிக்குமார் ஓட்டி சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது மொபட்டும், அந்த வழியாக வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில், ரவிக்குமார் வெங்கடேசன் ஆகியோர் அதே இடத் தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், பலியான கல்லூரி மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). மணியாச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (21) இவர்கள் 3 பேரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தனர்.
நேற்று காலை ஒரே மொபட்டில், இவர்கள் 3 பேரும் படுநெல்லி கிராமத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு, வந்து கொண்டிருந்தனர். மொபட்டை ரவிக்குமார் ஓட்டி சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது மொபட்டும், அந்த வழியாக வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில், ரவிக்குமார் வெங்கடேசன் ஆகியோர் அதே இடத் தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், பலியான கல்லூரி மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X