search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி பதவியேற்பு: எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி டெல்லி பயணம்
    X

    பிரதமர் மோடி பதவியேற்பு: எடப்பாடி பழனிசாமி 30-ந்தேதி டெல்லி பயணம்

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி காலை டெல்லி செல்கிறார்.
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி உள்ள நிலையில் பா.ஜனதா கட்சி மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த முறையை போலவே இந்த முறையும் பா.ஜனதா கட்சி கூட்டணி மந்திரிசபையை அமைக்க முடிவு செய்துள்ளது.  பிரதமராக நரேந்திர மோடி வருகிற 30-ந்தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி மாளிகையில் அன்று இரவு 7 மணிக்கு இதற்கான விழா நடைபெறுகிறது.


    பிரதமருடன் மந்திரிகள் சிலரும் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பா.ஜனதா கூட்டணி தலைவர்களும், பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்கிறார்கள்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். இதற்கு 30-ந்தேதி காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து அவர் விமானத்தில் டெல்லி செல்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

    அவரும் அன்றே புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவரது பயண திட்டம் பற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
    Next Story
    ×