என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பூக்கடைகாரர் பலி
Byமாலை மலர்28 May 2019 12:03 PM GMT (Updated: 28 May 2019 12:03 PM GMT)
உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த பூக்கடைகாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உடன்குடி:
ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகராஜன் (வயது 33). இவர் குரும்பூரில் பூக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி வனப்பிரியா என்ற மனைவியும், 3 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவரது உறவினர் சத்யராஜ் என்பவருடன் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கல்லாமொழி அருகே வந்த போது உடன்குடி பதுவைநகரைச் சேர்ந்த ஜேசுராஜ் (35) என்பவரது பைக் நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மகராஜன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X