என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
சேலம் மாவட்டத்தில் மழை
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, ஜங்சன், அம்மாப்பேட்டை, 4 ரோடு, கலெக்டர் அலுவலகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதேபோல புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, காடையாம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்கினர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 49 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலத்தில் 24.3 மி.மீ., காடையாம்பட்டி 4, பெத்தநாயக்கன்பாளையம் 3, ஏற்காடு 2, ஆத்தூர் 1.4 மி.மீ. மழை என மாவட்டம் முழுவதும் 83.3. மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்