என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தமிழக -கேரள எல்லைகளில் போலீசார் வாகன சோதனை - போதை பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை
கூடலூர்,:
கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விளையும் காய்கறிகள் பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதுபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுகின்றன. தேனி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாகவும் ஓணம் பண்டிகையை பயன்படுத்தி இந்த கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து கடத்தல் சம்பவங்களை தடுக்க தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் வாகனச் சோதனை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்திரவிட்டுள்ளார். இதையெடுத்து இந்தப் பகுதிகளில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.
உணவுப்பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்றும் மதுபானங்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருட்கள் மறைத்து எடுத்துப் செல்லப்படுகிறதா? என்றும் அனைத்து வாகனங்களிலும் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்