என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு
Byமாலை மலர்18 Sept 2019 11:04 AM IST (Updated: 18 Sept 2019 11:04 AM IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை:
தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது.
வங்க கடலின் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர எல்லைப் பகுதி மற்றும் தெலுங்கானா வரை நீண்டுள்ளது.
இந்த சுழற்சியால் 12 மணி நேரத்திற்குள் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் கருமேகங்கள் திரண்டு வந்ததால் ஆங்காங்கே லேசான மழைபெய்தது. இரவிலும் சில இடங்களில் மழை பெய்தது.
இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே இன்றிரவு ஓரளவு பலத்த மழை பெய்யும் என தெரிகிறது.
தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது.
வங்க கடலின் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக ஆந்திர எல்லைப் பகுதி மற்றும் தெலுங்கானா வரை நீண்டுள்ளது.
இந்த சுழற்சியால் 12 மணி நேரத்திற்குள் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
காவிரி டெல்டா பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனவே இன்றிரவு ஓரளவு பலத்த மழை பெய்யும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X