search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மருத்துவ பரிசோதனை
    X
    மருத்துவ பரிசோதனை

    இடுவாய் ஊராட்சியில் 8,161 பேருக்கு மருத்துவ பரிசோதனை

    இடுவாய் ஊராட்சியில் மருத்துவக்குழுவினரால் இதுவரை 8,161 பேரிடம் சளி, காய்ச்சல் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    மங்கலம்:

    மங்கலம் அருகே உள்ள இடுவாய் ஊராட்சியில் இருந்த 2 டிரைவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இடுவாய் ஊராட்சி எல்லைகள், இடுவாய் ஊராட்சிக்கு செல்லும் முக்கிய சாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடுவாய் ஊராட்சியில் மருத்துவக்குழுவினரால் இதுவரை 8,161 பேரிடம் சளி, காய்ச்சல் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.கல்யாண சுப்பிரமணியம், மங்கலம் சுகாதார ஆய்வாளர்கள் சிவநாதன், வெங்கடேஷ் பெருமாள், செவிலியர் உள்பட மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர்.
    Next Story
    ×