search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் நவீன கருவி
    X
    கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் நவீன கருவி

    கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் நவீன கருவி - சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

    கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் நவீன கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவுவதை தடுப்பதற்காக என்னென்ன புதுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சியில் குதித்துள்ளன. அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டி.யும் கொரோனா தடுப்பு பணிக்கான கண்டுபிடிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தோல் வெப்பநிலை, இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து, அதன் அடிப்படையில் கொரோனாவுக்கான அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையிலான நவீன தொழில்நுட்ப கருவியை சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்துள்ளது. இந்த கருவியை கைகளின் மணிக்கட்டில் கட்ட வேண்டும்.

    ‘புளூடூத்’ உதவியோடு இயங்கும்

    ‘மியூஸ் ஹெல்த் அப்’ என்ற செயலியின் (அப்ளிகேஷன்) உதவியோடு இது செல்போனில் இயங்கும். ‘புளூடூத்’ உதவியோடு செயல்படும். தோல் வெப்பநிலை, இருதய துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு ஆகியவற்றின் தகவல் சேமிக்கப்படுவதோடு, சர்வரிலும் சேமிக்கப்படும். நிர்வாக செயல்பாடுகளுக்காக கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்களை ஒருங்கிணைந்த முறையிலும் கண்காணிக்க முடியும். மேலும் ஆரோக்கிய சேது செயலியின் அறிவிப்புகளையும் பெற முடியும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்றால், பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும். புது தொழில்நுட்ப கருவியின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்டமாக கொரோனா அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் நவீன கருவிகள் ஜூன் மாத இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனா அறிகுறியை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவியில் உள்ள வசதிகள் வருமாறு:-

    * அனைத்து சமயங்களிலும் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    * டாக்டர்கள் தொலைதூரத்தில் இருந்தவாறு நோயாளிகளின் உயிரணுக்களை கண்காணிக்க முடியும்.

    * எத்தனை அடி நடந்து சென்றிருக்கிறார்கள்?. கலோரி அளவு, நடந்த தூரம் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்க முடியும்.

    * பயன்படுத்துபவர்களின் உயிரணுக்கள் ஆபத்தான நிலைக்கு சென்றால் உடனடியாக அவசர மீட்பு முறைக்கு தானாகவே எச்சரிக்கை விடுக்கும்.

    * தூங்கும் நேரத்தை தானாகவே கண்காணிக்கும்.

    * ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 4 வாரங்கள் வரை சார்ஜ் இறங்காது. நீடித்து உழைக்கும் பேட்டரிகள் உள்ளன.

    * உடல் வெப்பநிலை அதிகரித்தாலோ, ஏதாவது சிக்கல்களை சந்தித்தாலோ பயனாளிகள் அவசர எச்சரிக்கை விடுக்கலாம்.

    * ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு குறையும்போதும், பயனாளிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழையும்போதும் இந்த கருவி தானாகவே எச்சரிக்கை விடுக்கும்.

    * இந்த நவீன கருவிக்கு சுமார் ரூ.3,500 விலையாக நிர்ணயிக்கப்பட உள்ளது. நுகர்வோர் பயன்பாட்டுக்காக 70 நாடுகளில் இந்த கருவி விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
    Next Story
    ×