என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த கூட்டுறவுத்துறை ஊழியர்கள்
Byமாலை மலர்19 Aug 2020 4:22 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், நிலவளவங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையில் சீரமைப்பு என்ற பெயரில் 2009-ம் ஆண்டு முதல் 636 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. 32 துணைப்பதிவாளர் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் நிலையிலான மேலாண்மை இயக்குனர் பணியிடங்களை குறைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் இயக்கம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கூட்டுறவு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், நிலவளவங்கி, தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறையில் சீரமைப்பு என்ற பெயரில் 2009-ம் ஆண்டு முதல் 636 பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அதிக பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. 32 துணைப்பதிவாளர் மற்றும் 54 கூட்டுறவு சார் பதிவாளர் நிலையிலான மேலாண்மை இயக்குனர் பணியிடங்களை குறைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X