என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
குளித்தலை அருகே 2 குடும்பத்தினர் இடையே தகராறு - 7 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்3 Oct 2020 4:35 PM IST (Updated: 3 Oct 2020 4:35 PM IST)
குளித்தலை அருகே 2 குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (55). இந்த 2 குடும்பத்தினர் இடையே வரப்பு தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2 குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் அரிவாள், களைகொத்தி, குச்சி போன்றவற்றால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் முருகேசன், ஜெகநாதன், ஜெகநாதனின் மனைவி சரோஜா(40), மகள் கவிதா (20) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகராறு தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில் ஜெகநாதன், சரோஜா, கவிதா ஆகிய 3 பேர் மீதும், ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் முருகேசன், அவரது மனைவி பொன்னம்மாள், மகன் பழனிச்சாமி, மகள் காமாட்சி ஆகிய 4 பேர் மீதும் குளித்தலை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X