என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வனவிலங்குகளின் தாகத்தை தணித்த மழை
Byமாலை மலர்20 May 2021 12:31 PM IST (Updated: 20 May 2021 12:31 PM IST)
உடுமலை வனப்பகுதியில் பெய்த மழையால் வனவிலங்குகளின் தண்ணீர் தேவை சற்று பூர்த்தியடைந்துள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இது தவிர அரிய வகை உயிரினங்கள், மூலிகைகள், தாவரங்களும் வனப்பகுதியில் உள்ளது.
இந்தநிலையில் கோடை காலத்தில் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி அவ்வப்போது அமராவதி அணைக்கு கூட்டமாக வரும். கடந்த 2 மாதங்களாக யானைகள் கூட்டம் அமராவதி அணைக்கு படையெடுத்தன. இதனால் உடுமலை-மூணாறு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதனிடையே கடந்த 2வாரங்களுக்கு முன்பு தண்ணீருக்காக உடுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் மீது மலைவாழ் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கற்களை கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து 5பேர் மீது வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதுடன்,மலைவாழ் மக்களுக்கும் வனவிலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனிடையே உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்களில் கடந்த 8-ந்தேதி முதல் கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.இதில் உடுமலை வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள், செந்நாய் கூட்டங்கள், 250க்கும் மேற்பட்ட யானைகள், 150க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள், மான் கூட்டங்கள் இருப்பதாக ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில்தெரிவிக்கப்பட்டது. கணக்கெடுப்பின் போது வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையில் களமிறங்கினர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்துள்ளது. இதன் மூலம் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேற சாத்தியமில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X